Posted: 24 Jan 2012 09:22 AM PST
§ அநியாயம் என்பது வாழ்க்கையோடு இணைந்த ஒரு பாகம்.
§ ஒரு மனித மனதால் எதை நினைத்து, நம்பி, அதற்காக செயல்பட முடியுமோ, அதை நிச்சயம் அடைய முடியும்
§ பொறுமை இருந்தால் பல கதவுகள் திறக்கும்.
§ நாம் முழு ஆனந்தத்துடன் பிறந்தாலும் வாழ்க்கை முழுவதும் சந்தோஷத்தைத்
தேடும் பிச்சைக்காரர்களாக வாழ்கிறோம்.
§ தேடுவது எனபதே சந்தோஷம் தரும் விஷயம். நீங்கள் இங்கு, இப்பொழுது சந்தோஷமாக இல்லை யென்றால் எங்கும் எப்பொழுதும் சந்தோஷமாக
இருக்கமுடியாது.
§ வெறுப்பு மனதை குப்பையாக்குகிறது. அமைதி அதை தூய்மையாக்குகிறது
§ விவேகமுள்ளவர்களுக்கு சோதனைகள்தான் சிறந்த ஆசான்
§ நம்மை மாற்றி கொள்வோம். பிறகு பாருங்கள் உலகம் உங்களுக்கு
சுவாரசியமான விளையாட்டாகும்.
§ ஞானம் பெறாதவர்களுக்கு எந்தச் செய்தியும் நல்ல செய்தியல்ல.
§ நாமே விதித்துக் கொண்ட வாழ்க்கை முறையால் வாழ்க்கையை அநாவசியமாகக்
குழப்புகிறோம்.
§ முடிவே இல்லாதவை பிரபஞ்சம் மற்றும் காலம். இதில் நாம் எங்கு
இருக்கிறோம்.
§ மனிதன் தன்னுடைய கர்பனை உருவத்திற்கு பலியாகுபவன்.
§ பல சமையங்களில் ஒரு நண்பனை இழக்கும் வரை அவரை நாம் அடையாளம்
காண்பதில்லை.
§ தோல்வியின் சிதைகளுக்கிடையே துக்கம் வசித்திருக்கும்.
§ மிக தாழ்வான சுய கவுரவம் உலகத்தை நரகமாக்கும்.
§ மன்னிப்பதால் இதயம் மேலும் பாசத்தால் நிரம்பும்
§ வாழ்க்கையில் திரும்ப வராத மூன்று சொல் 1.பேசிய வார்த்தைகள் 2. தவறவிட்ட சந்தர்ப்பங்கள், 3. இழந்த ஒரு கணம்
§ ஒரு கூர்மையான மனது எந்தக் கதவையும் திறக்கும். ஒரு சோம்பலான
மனதுக்கு கதவுகளை மூடத்தான் தெரியும்.
§ படித்த சிந்தனை துளிகள்


No comments:
Post a Comment